மேட்டுப்பாளையம், ஏப்.12- காரமடை, கரியமலையில் புதிய கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, மலை மீது ஆய்வு நடத்த வந்த வட்டாசியரிடம் கிராம மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைத்தனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள கார மடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன் நகர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கரியமலை அமைந் துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையின் உச்சியில் உள்ள ஒன்பது ஏக்கர் நிலம் தனியார் ஒருவருக்கு நிபந்தனை பட்டாவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பட்டாவாக மாற்றி, இந் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்ப னையும் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், இம்மலை உச்சியில் உள்ள ஒன்பது ஏக்கர் நிலத்தில் கிராவல் மண் மற்றும் கல்குவாரி அமைக்க அனுமதி கோரி சம்பந்தப் பட்டவர் அரசிடம் விண்ணப்பித் துள்ளார். இதனடிப்படையில் இங்கு குவாரி அமைக்க அனுமதி வழங்குவதற்கான முதற்கட்ட பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.
ஆனால், கரியமலையில் குவாரி அமைக்க மலையை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். மலை உச்சியில் குவாரி அமைத்து பாறைகளை தகர்க்க வெடி வைத்தால் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்படும். மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர் மலையை சுற்றியுள்ள 12 ஓடைகள் வழியாக பெள்ளாதி குளத்திற்கு செல்கிறது என்பதால், இதன் இயற் கையான நீரோட்டம் தடைபடும். இப்பகுதி விவசாயம் கடுமை யாக பாதிக்கப்படும். இதற்காக நடத் தப்பட்ட மக்கள் கருத்து கேட்பு கூட்டத்திலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், புதிய கல்குவாரி அமைப்பது தொடர் பான ஆய்விற்கு மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் மாலதி கரியமலைக்கு வந்திருந்தார். இதனையறிந்த இப்பகுதி மக்கள் ஒன்று கூடி வட்டா சியருடன் மலை மீது ஏறி சென்று இங்கு புதிய கல்குவாரி அமைப்ப தால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு, வீடு கள் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு குறித்து மக்கள் அதி காரிகளிடம் வேதனையை வெளிப் படுத்தினர். மலை உச்சியில் அதிகாரிகள் ஆய்வு செய்ய செல்வதை அறிந்த மக்கள், திரண்டு அதிகாரிகளை மறித்து கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது.