districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் போராட்டம்

சேலம், டிச.7- அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்தி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, பிரச்சனை யின் மீது உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். சேலம் மாநகரம், 24 ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதி கள் செய்து தராத மாநகராட்சி நிர் வாகத்தையும், மாமன்ற உறுப்பின ரையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சேலம் மேற்கு மாந கரக்குழு சார்பில் மறியல் போராட் டத்திற்கு அறைகூவல் விடுக்கப் பட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட் டது. இதனைத்தொடர்ந்து பிள்ளை யார் நகர் பகுதியில் மறியல் போராட் டத்தில் ஈடுபட முயன்றபோது காவல் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.  இதில், பிள்ளையார் நகர் பகுதி யில் தரமான சாலை, கழிவுநீர் வடி கால், பொதுக்கழிப்பிடம், நீர்த் தேக்க தொட்டி ஆகியவற்றை புதுப் பித்து தர வேண்டும். சவுக்காடு பகு தியில் தரமான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி யினர் வலியுறுத்தினர்.  இதையடுத்து, இப்பிரச்சனை கள் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தன்பேரில், போராட்டம் தற் காலிகமாக விளக்கிக் கொள்ளப் பட்டது. முன்னதாக, சிபிஎம் மேற்கு மாந கரக்குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த  போராட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.குணசே கரன், ஐ.ஞானசௌந்தரி, மேற்கு  மாநகர செயலாளர் எம்.கனகராஜ், கிளை செயலாளர்கள் குமரேசன், வரதராஜ பெருமாள், பாலன், நிர் மலா, வாலிபர் சங்க மாவட்ட தலை வர் வி.ஜெகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.