districts

img

அறிவிக்கப்படாமல் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள் பொதுமக்கள் தற்கொலை முயற்சி - பரபரப்பு

பள்ளபாளையம் கிராமத்தில் கடந்த மூன்று தலை முறைக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர் களுக்கு நீர்நிலை புறம்போக்கு விதிமுறைகள் குறித்தோ, சட்ட விதிகள் குறித்தோ அரசு அதிகாரிகள்  எந்தவித விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. இதுவரை மின் இணைப்பு, குடிநீர் வசதி செய்யப்பட்டதுடன், உள்ளாட்சித்துறை சார்பில் சாலை, தெருவிளக்கு வசதி செய்யப்பட்டது. மேலும், வீட்டுவரி, குடிநீர் வரி வசூல் செய்யடப்பட்டு வந்தது. அவ்வாறு இருக்கும் நிலையில், மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றிய தால் அனைத்து குடும்பத்தினரும், குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றம்  குறித்து முன்கூட்டியே அறிவிக்காமல் ஆக்கிரமிப்பை  அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

உடுமலை, மார்ச் 24- உடுமலை அருகே நீர்வழிப்பாதை யில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று வது குறித்து, முன்கூட்டியே அறிவிக் காமல், வீடுகளை தரைமட்டமாக்கிய அரசு அதிகாரிகளை கண்டித்து பொது மக்கள் தற்கொலைக்கு முயற்சித்த சம் பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நீர்நிலைக ளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவ தையும் அகற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை யின் கீழ் உள்ள கீழ்பவானி வடிநிலக் கோட்டம், பவானிசாகர் அணைக் கோட்டம் மற்றும் உடுமலை திரு மூர்த்தி அணைக்கோட்டம் ஆகியவற் றில் 10 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்த ரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படை யில் ஆய்வு செய்த அதிகாரிகள் குழு, உடுமலை அருகே தென்பூதிநத்தம் பள்ளபாளையம் கிராமத்தில் உள்ள செங்குளத்திற்கு வரும் நீர்நிலைப் பாதையில் உள்ள 22 வீடுகள் மற்றும் இரண்டு கோவில்களை அகற்றும் பணி வியாழனன்று, வருவாய் கோட்டாச்சியர் கீதா தலைமையில் நடைபெற்றது.

இதில், திருமூர்த்தி அணையின் மேற்பார்வை பொறியா ளர், செயற்பொறியாளர், வட்டாச்சியர் கணேசன், ஒன்றிய ஆணையாளர்  ஷெல்டன் உள்ளிட்ட வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை அதிகாரி கள் உடனிருந்தனர்.  இதற்கிடையில், ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிக்காக உடுமலை  காவல்துறை துணை கண்காணிப்பா ளர் தேன்மொழி வேல் தலைமையில், 3  காவல் ஆய்வாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந் நிலையில், பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள அவகாசம் தராத வகையில், வியாழனன்று அதிகாலை மின்  இணைப்புகளை துண்டித்து, பொக் லைன் இயந்திரங்களை கொண்டு வீடு களை தரைமட்டமாக்கினர்.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த கருப்பராயன் கோவிலை அகற்ற அதி காரிகள் சென்ற போது, அப்பகுதி  பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர்  கோவில் நுழைவு வாயிலில் போலீ சாரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது பொதுமக்களில் சிலர்  மண்ணெண்ணையை ஊற்றி தீக்கு ளிக்க முயன்றனர். இதனால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் சஷாங்சாய், அப்பகுதி யில் ஆய்வு மேற்கொண்டார். இதை யடுத்து கோவில் நிர்வாகத்தினர் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் உரிய ஆவ ணங்களை வருவாய்த்துறை அதிகாரி களிடம் காண்பிக்க வேண்டும். அது வரை ஆக்கிரமிப்பு பணிகள் தற்கா லிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஆவ ணங்களை வழங்காவிடில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவிலை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார். இதனைய டுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.