districts

img

விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்குக

நாமக்கல், அக்.11- விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க  வேண்டுமென வலியுறுத்தி கூட்டுறவு சங்க தையல் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க  வேண்டும். கூட்டுறவு சங்க தையல் தொழி லாளர்களுக்கு துணி வழங்கும் போது நாடா,  பட்டன், ஜிப்பு, நூல் ஊசி வழங்க வேண்டும்.  குமாரபாளையம் தாலுக்காவில் கூட்டுறவு சொசைட்டி ஆரம்பித்து தையல் தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். தையல் கடைகளுக்கு இலவச  மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட தையல் கலைஞர்கள் தொழிலாளர் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் அண்ணா துரை தலைமை ஏற்றார். இதில் சிஐடியு  மாவட்டத் தலைவர் எம்.அசோகன், மாவட்டச்  செயலாளர் என்.வேலுசாமி உட்பட ஏராள மான தையல் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.