அவிநாசி, பிப்.21- அவிநாசியில் உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு தமி ழர் பண்பாட்டு கலாச்சார பேரவை அறக்கட்டளை சார்பில் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அவிநாசியில் புதன்கிழமை உலக தாய் மொழி நாள் விழா நடைபெற்றது. அவிநாசி பயணியர் விடுதி முன்பு தொடங்கிய பேரணி செங்காடு திடலில் முடிந்தது. இதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழர் பண்பாட்டு கலாச்சார பேரவை அறக்கட்டளை தலைவர் நடராசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், துணைத் தலைவர் பழனிசாமி, தமிழ் பேராசிரியர் மணிவண்ணன், பணி நிறைவு ஆசிரியர் சுப்பிரமணியம், குமாரபாளையம் குமரன், நல்லது நண்பர் அறக்கட்டளை ரவிக்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகி சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.