districts

img

பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்க்கும் ஒபிஎஸ், இபிஎஸ்

அவிநாசி, பிப்.16- திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதத் தில் 90 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் திமுகவை குறை கூறி பொய் பிரசாரம் செய்து வருவதாக ஆ.ராசா எம்.பி. சாடி யுள்ளார். அன்னூர் பேரூராட்சி, அவி நாசி பேரூராட்சி, திருமுருகன் பூண்டி நகராட்சிகளில் போட்டியி டும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து செவ்வா யன்று மாலை அவிநாசியில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆ.ராசா  பிரசாரத்தில் ஈடுபட் டார். அப்போது அவர் பேசியதா வது, ஒரே நாடு, ஒரே மொழி எனக்  கூறி மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரங்களை ஒன்றிய மோடி அரசு அழிக்கப் பார்க்கிறது. அதே நேரம், ஈவேரா பிறந்த தமிழகத் தில் மட்டும் சமஸ்கிருதத்திற்கு எதிராக குரல் கொடுத்து, தமிழ் மொழியை காத்து நிற்கிறோம். இதேபோல், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த 38 எம்.பி.க்க ளும் நாடாளுமன்றத்தை முடக்கி னோம்.  மேலும், திமுக ஆட்சிக்கு வந்த வுடன் தேர்தல் வாக்குறுதியான, பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக் கப்பட்டது. மகளிருக்கு இலவச பேருந்து சலுகை, நோய்த்தொற்று காலத்தில் குடும்பத்தில் தாய்  அல்லது தந்தை உயிரிழந்திருந் தால் அவர்களது பிள்ளைக்கு ரூ.3 லட்சமும், இருவரும் உயிரிழந்தி ருந்தால் ரூ.5 லட்சமும் டெபாசிட் செய்யப்பட்டது. தமிழகத்திற்கு 10  புதிய அரசு கல்லூரிகள் என நாள் தோறும் மக்களுக்காக திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்படி ஆட்சிக்கு வந்து 8 மாதத் தில் 90 சதவிகித பணிகளை நிறை வேற்றியுள்ளது.  ஆனால், திமுக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற் றவில்லை என எடப்பாடி பழனிச் சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் திமுகவை குறை கூறி பொய் பிரச் சாரம் செய்து வருகிறார்கள். ஆகவே அரசின் திட்டங்களையும், ஒதுக்கீடு செய்த நிதிகளையும் முழுமையாக மக்களுக்கு செயல் படுத்த திமுக தலைமையிலான  மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சி வேட்பாளருக்கு வாக்க ளியுங்கள். இவ்வாறு ஆ.ராசா  எம்.பி. பேசினார். முன்னதாக , இந்த பிரச்சார கூட் டத்தில் திமுக மாவட்ட பொறுப்பா ளர் பத்மநாபன், மாநில பொதுக் குழு உறுப்பினர் சரவணன்நம்பி, திருமுருகன் பூண்டி பொறுப்பா ளர் பழனிச்சாமி, பாரதி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர்கள் வெங்கடாச லம், பழனிச்சாமி, சிஐடியு விசைத் தறி மாநில தொழிலாளர் சம்மேள னத்தின் முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், முன்னணி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.