கோவை, ஜூன் 28- ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஆதார் எண் கேட்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனிடம், ஆட்டோ தொழி லாளர் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மனு அளித்தனர். இதுகுறித்து சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் முத்துக்குமார் கூறுகையில், கோவை மாநகர காவல் துறையால் கோவையில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் ஒரு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அப் படிவத்தில், ஆட்டோ நிறுத்தம் சார்ந்துள்ள சங்கம், ஓட்டு நரின் முகவரி, கைப்பேசி எண், ஆதார் எண் உள்ளிட்ட விவ ரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ஆட்டோ நிறுத்தங்கள் மற்றும் ஓட்டுநர் எண்ணிக்கை தகவல்களை சேகரிப்பதில் எந்த ஆட் சேபனையும் இல்லை. அதே நேரத்தில் ஆதார் எண்ணை கேட்பது ஏற்புடையதாக இல்லை. அரசே ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிர வேண்டாம் என அறிவித்துள்ள போதும், காவல் துறையினர் ஆதார் எண்ணை வழங்கு மாறு நிர்பந்திக்கின்றனர். எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு உடன டியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கோவை மாந கர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனிடம் கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டு கமிட்டி நிர்வாகிகள் மனு அளித்தோம். எங்களது கோரிக்கை யில் உள்ள நியாயத்தை உணர்ந்த காவல் ஆணையர் ஆதார் எண்ணை கேட்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்து வதாக தெரிவித்தார், என்றார்.