districts

img

சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

திருப்பூர், ஏப்.18- காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங் கத்தினர் திங்களன்று கையில் மெழுகு வர்த்தி ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  தமிழ்நாடு முதல்வர் சத்துணவு ஊழி யர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வலியு றுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி தமிழ்நாடு  சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட  தலைவர் எம்.விஜயலட்சுமி தலைமை யில்  போராட்டம் நடைபெற்றது. இதில்,  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும்.  காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு  ஊழியர்களிடமே வழங்க வேண்டும். 3  மாதமாக வழங்கப்படாமல் உள்ள  மானியத் தொகையை உடனடியாக  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது.  இதில், தமிழ்நாடு சத்துணவு ஊழி யர்கள் சங்க மாவட்டச்செயலாளர் எஸ். முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப்  பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள்  சங்க மாவட்ட தலைவர் அ.ராணி மற்றும்  மாவட்ட இணை செயலாளர் ஆர்.ராமன்  வாழ்த்தி பேசினர். மாவட்டச் செயலா ளர் எம்.பாலசுப்பிரமணியன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் அ. ராஜேஸ்வரி நன்றி கூறினார்.