districts

img

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிடுக

தாராபுரம், ஏப்.13– தாராபுரம் மற்றும் மூலனூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக முதல்வ ருக்கு கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு ஆர்பாட்டம் நடைபெற் றது. சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும். தகுதி உள்ள சத்துணவு ஊழியர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அர சுத் துறைகளில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார் பில் முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில், மூலனூர் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலை வர் மணிவேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்வி, பொரு ளாளர் செல்வராஜ், மாவட்ட துணை தலைவர்கள் மாசிலாமணி, ஆறு முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், தாராபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் முதல்வர் கவனத்தை ஈர்க் கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் ஞான புஷ்பம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஒன் றிய செயலாளர் ஈஸ்வரி, பொருளா ளர் கண்ணஞ்சி, மாவட்ட இணைச் செயவர் ஜெயந்தி உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.