கோவை, செப். 2 - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டசத்து மாத திருவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணியை வெள்ளியன்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கிவைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தொடங்கி, வ.உ.சி மைதானம் வரை சென்ற டைந்தது. முன்னதாக இப்பேரணி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து பாதுகாப்புக் குறித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. ஊட்டசத்துக் கள் நிறைந்து உள்ள நமது பாரம்பரிய உணவு தானியங் களால் செய்யப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கி, அவர்களை ஆரோக்கியமாக வளர்க்கவும், கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஊட்டச் சத்து மாத விழாவின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள் ளப்படவுள்ளது என்றார். இப்பேரணியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பி.முருகேஸ்வரி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.தமிழ்செல்வன் மற்றும் அங்கன்வாடி பணியா ளர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.