தருமபுரி, ஜன.1- காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயற் குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்ட துணைத்தலைவர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில், மாநிலச் செயலாளர் பெ.மகேஸ்வரி, மாவட்ட தலைவர் சி.காவேரி, மாவட்ட செயலாளர் தேவகி, மாவட்ட நிர்வாகிகள் ராமன், ரீனா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிபிஎஸ் என்ற புதிய ஓய்வூதிய திட் டத்தை கைவிட்டு, அனைத்து ஊழி யர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும். கொரோனா காலத்தில் முடக் கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உட னடியாக வழங்க வேண்டும். சத்து ணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதி யம் பெறும் ஊழியர்களை நிரந்தரப் படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களிலும் தரு மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கம் பங்கேற்கும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.