districts

img

யூவின் ஆன்லைன் முறையை நீக்குக செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக.25- ஒன்றிய அரசின் யூவின் இணையதள முறையை கண்டித்து மாநகராட்சி சுகா தார செவிலியர் சங்கம் சார்பில் சேலம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் சுகா தாரத் திட்டங்களை செயல்படுத்த மாநக ராட்சி சுகாதார செவிலியர்கள் பணியாற்றி  வருகின்றனர்.  தற்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி பதிவு செய்யும்  முறையினை ஒன்றிய அரசு மாற்றம் செய் துள்ளது. இதனை இணையதளம் மூலமாக பதிவு செய்ய யூவின் இணையதளத்தை அறி முகம் செய்துள்ளது.  இதனால், செவிலியர்களுக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது. இந்த இணைய தளத்தை இயக்க கணினி இயக்குநர்களை நியமிக்க வேண்டும். தடுப்பூசி பணியை மட்டும் செவிலியர்களுக்கு வழங்க வேண் டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க  வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங் கள் எழுப்பினர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சாந்தி தலைமை ஏற் றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் டி.மாலதி பேசினார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச்  செயலாளர் சுரேஷ், மாவட்டப் பொருளாளர்  வி.செல்வம், முன்னாள் மாவட்டத் தலை வர் சி.முருகபெருமாள், சுகாதார சங்க செய லாளர் அ.சண்முகம் ஆகியோர் பேசினார்.  இதில் திரளான மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.