கோவை, டிச.16- தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி, எம்ஆர்பி செவிலியர்களுக்கு மாத வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 7 வருடத் திற்கு மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நோயாளி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங் களை உருவாக்க வேண்டும். 2 ஆயிரத்து 500 காலிப்பணி யிடங்களையும் கொரோனா பெருந்தொற்றின்போது சிகிச்சை வழங்கிய செவிலியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். இதில், ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.