திருப்பூர், நவ.11- திருப்பூரில் வருகிற ஜனவரி மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் நொய்யல் நதிக் கரையில் பொங்கல் விழாவை கலை நிகழ்ச்சிகளோடு சிறப்பாக நடத்துவது என்று நொய்யல் பண்பாட்டு அமைப் பின் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. இதற்காக நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் அரிமா எம். ஜீவானந்தம் தலைமையில் விழாக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பறையாட்டம், வள்ளி கும்மி, பெருஞ்சலங்கை ஆட்டம் களரி, சிலம்பாட்டம், திருவண்ணா மலை பெரிய மேளம், தேவராட் டம், கரகம்,காவடி, வழுக்கு மரம், நாட்டுப்புறப் பாடல்கள், தஞ்சை சின்ன பொண்ணு, ராஜலட்சுமி செந்தில் போன் றோரின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தை மைய நோக்கமாக வைத்து இந்த சிறப்பான பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகிறது. இவ்விழாவை சிறப்பாக நடத்த திருப்பூர் வாழ் மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் நொய்யல் பண் பாட்டு அமைப்பு கேட்டுக் கொண்டுள் ளது.