சென்னை, டிச. 6- மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு தனது சங்க உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறி வித்துள்ளது. இதுகுறித்து தலைவர் ஜெ.ராஜா, பொதுச் செயலாளர் அண்ணா. குபேரன், பொருளாளர் ஞா. ஸ்டேன்லி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: மிக்ஜம் புயலால் சென்னை தலை நகர் வெள்ளக்காடாக மாறியிருக்கி றது. தமிழ் நாடு அரசு மக்கள் நலனுக் காக பல்வேறு பணிகளை முன்னெ டுத்து உள்ளது. அரசுக்கு உறுதுணை யாக அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசு ஊழியர்கள் அனைவரும் களத்தில் இறங்கி மக்களை காக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் கடும் பணி மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் மக்களுக்கு பிரச்சனை என்றால் உடனே ஓடோடி வந்து தொண்டாற்றும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு இது மட்டும் போதாது என்று உணர்ந்து தமது உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை வெள்ள நிவாரண பணி மேற்கொள்ள தமிழ்நாடு முதல மைச்சர் நிவாரண நிதிக்காக வழங்குவ தாக முடிவெடுத்துள்ளது. ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யக் கோரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநர் ஆகி யோருக்கு கடிதம் வழங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கி றோம்.