சேலம், டிச.21- சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த ஆத் தூர் வெற்றிலை மார்கெட்டை காலி செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சியடைந் தனர். நகராட்சி அறிவிப்பை திரும் பப்பெறக்கோரி விவசாயிகள் முற் றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் மற் றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளான தென்னங்குடிபாளையம், பைத்தூர், பெத்தநாயக்கன்பாளை யம், பெரிய கிருஷ்ணாபுரம், எடப் பாடி, கெங்கவல்லி உள்ளிட்ட பகு திகளில் விவசாயிகள் முதன்மை சாகுபடி பயிராக சுமார் நான்கு தலைமுறைக்கு மேலாக வெற் றிலை விவசாயம் செய்து வருகின்ற னர். இங்கு விளையும் வெற்றி லையை, ஆத்தூர் பேருந்து நிலை யம் அருகே சுமார் 60 ஆண்டுகளுக் கும் மேலாக செயல்பட்டு வரும், காந்திஜி வெற்றிலை மார்க்கெட் டிற்கு கொண்டு வருகின்றனர். இந்நி லையில், இந்த வெற்றிலை மார்க் கெட் உள்ள இடத்தில் புதிதாக கட்டடம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், வியா பாரம் செய்ய வேறு இடம் தரு வதாகவும், இதனால் வெற்றிலை மார்க்கெட்டை காலி செய்ய வேண்டும் என நகராட்சி அலுவலர் கள் தெரிவித்துள்ளனர். இதனால் வெற்றிலை விவசாயிகள் அதிர்ச்சி யடைந்தனர். இதனையடுத்து, ஆத் தூர் வட்டார வெற்றிலை உற்பத்தி யாளர்கள் நலச்சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நக ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இதுகுறித்து, வெற்றிலை விவ சாயிகள் கூறுகையில், அறுவடை காலங்களில் நோய் தாக்கத்தால் வெற்றிலை விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகள், வியாபாரி கள் கடும் சிரமமத்திற்குள்ளாகி வரு கின்றனர். தற்போது, கட்டிடம் கட்டி தருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தை கண்டித்தும், மாற்று இடம் தருவதாக தெரிவித்ததை உறுதி செய்து, அதனை பேருந்து நிலையம் அருகிலேயே அமைத்து தர வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து, கோரிக் கைகளை அடங்கிய மனுவை நக ராட்சி ஆணையரிடம் மனு அளிக்க சென்றனர். ஆனால், நகராட்சி அலு வலகத்தில் ஆணையாளர் இல்லா ததால் வெற்றிலை விவசாயிகள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.