கோவை, மார்ச் 13- ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்து மார்ச் 28 ஆம் தேதி யன்று கோவை மாவட்டத்தில் 10 மையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்து தொழிற் சங்கங்களின் மண்டல மாநாட்டில் தீர் மானிக்கப்பட்டது. மார்ச் 28, 29 தேதிகளில் நாடு தழு விய அளவில் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள மத் திய தொழிற்சங்கங்கள் முடிவு செய் துள்ளது. இந்தப் பொது வேலைநிறுத் தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேலைநிறுத்த தயாரிப்பு மாநா டுகள், பேரவை கூட்டங்கள் ஆகிய வற்றை தொழிற்சங்கங்கள் நடத்தி வரு கின்றன. இந்நிலையில், கோவை காட் டூரில் உள்ள தியாகிகள் நிலையத்தில் ஞாயிறன்று அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற மேற்கு மண் டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வரும் 28, 29 தேதி களில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து தொழிலாளர் களையும் பங்கேற்க செய்து, வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது. மேலும், மார்ச் 28 ஆம் தேதியன்று கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மையம் என்ற வகை யில் 10 மையங்களில் மறியல் போராட் டங்கள் நடத்துவது. 29 ஆம் தேதி கோவை மத்திய தந்தி அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்து வது, மார்ச் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி முடிய 5 நாட்கள் மாவட்டம் முழுவதும் வேன் பிரச்சா ரம் மேற்கொள்வது. மார்ச் 22 ஆம் தேதி கோவை வடவள்ளியில் அனைத்து சங்கங்கள் கலந்து கொள்ளும் ஆர்ப் பாட்டம் நடத்துவது என்று தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, இந்த மண்டல மாநாட் டிற்கு எம்.எல்.எப். தொழிற்சங்க தலை வர் மு.தியாகராஜன் தலைமை தாங்கி னார். சிஐடியு பொதுச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். ஏஐடியுசி கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம், எம்எல்எப் திருப்பூர் சம்பத், எல்பிஎப் க.பிரபாகரன், ஐஎன்டியுசி ஏ.சிவசாமி, ஏஐசிசிடியு வெங்கடாசலம், எஸ்டி டியூ ரகுபுநிஷர், பி.சண்முகம் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.