districts

img

மாட்டிறைச்சி கடை நடத்தும் போராட்ட அறிவிப்பு

ஈரோடு, ஜன.10- மாட்டிறைச்சி கடை விவகாரத் தில், தொடர் உண்ணாவிரதம் தற் காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு கடை நடத்தும் போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறை கூவல் விடுத்துள்ளது.  ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தை யில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இறைச்சி கடைகள் செயல்பட்டு  வந்த நிலையில், 13 மாட்டிறைச்சி  கடைகளை நகராட்சி நிர்வாகம் எந்த விதமான முன்னறிவிப்புமின்றி இடித் தனர். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட்  கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி  தொடர் போராட்டம் நடத்தி வரு கிறது.  இதனைத்தொடர்ந்து, சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்று கடை  நடத்த அனுமதிக்கப்படும் என்றும், புதிதாக கட்டப்படுகிற கடைகளில் ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதிய ளித்தனர். ஆனால் இதுவரை கடை நடத்த அனுமதிக்காமல் இருந்து வரு கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜன. 9ஆம் தேதி முதல் தொடர் உண்ணா விரத போராட்டம் அறிவிக்கப் பட்டது. அதன்படி காவல் துறை  அனுமதியில்லாத நிலையில் உண் ணாவிரதம் நடைபெற்றது. செவ்வா யன்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், காவல்துறையினர் கேட்டுக்கொண்ட அடிப்படையில் மாட்டிறைச்சி கடைகள் நிரந்தரமாக நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று  நகராட்சி ஆணையர் தெரிவித்ததால் செவ்வாயன்று தொடர் உண்ணா விரதம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது.  இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் டி.சுப்பிரமணி தலைமையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவ ஞானம், மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, ஏ.பி.ராஜு உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இதுகுறித்து  தலைவர்கள் கூறுகையில், தற்போ தைய நிர்வாகத்தின் உறுதிமொழி யை நிறைவேற்றாவிட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து (22.1.2023)  ஞாயிறன்று மாட்டிறைச்சி கடை  உரிமையாளர்கள் மற்றும் அவர் களுக்கு ஆதரவாக பொதுமக்களை  ஆயிரக்கணக்கில் திரட்டி கடை நடத் தும் இயக்கத்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.