கோவை, செப்.18- அக்டோபர் மாதம் முதல் வட கிழக்கு பருவமழை துவங்கும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை ஆகியவை மூலம் மாநில அளவில் நீர்நிலைகள் பெருகி விவசாயம் செழித்து வருகி றது. இதன் ஒருபகுதியாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடப் பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும், இது எதிர்பார்த்த அளவுக்கு பெய்ய வில்லை. இதனால் 2 மாவட்டங்களி லும் உள்ள பெரும்பாலான நீர்நிலை கள் வறண்டு காணப்படுகின்றன. இந் நிலையில் கோவை, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அக்டோ பர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. கோவை, நீலகிரி யில் ஏற்கெனவே தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள விவ சாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் முன்னறிவிப்பு ஒன்றை வெளி யிட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட் டில் அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயி லாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்ப லூர், சேலம், தஞ்சை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாக்குமரி, காஞ்சிபுரம், தேனி, மதுரை, திரு வண்ணாமலை, புதுக்கோட்டை, சிவ கங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங் களில் வடகிழக்கு பருவமழை இயல் பான அளவில் பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள் ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவில் பெய்யும். எனவே அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் வடகிழக்கு பருவ மழை காலத்துக்கான குறுகிய - மத் திய கால பயிர் ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும். பாசன வசதியுள்ள பகுதிகளில் மட்டும் நீண்டகால பயிர் ரகங்களை தேர்வு செய்யலாம். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மழைநீரை சேமிக்கும் வகையில் குறுக்கும் நெடுக்குமாக 20 அடி இடைவெளியில் சிறுவரப்புகளை அமைக்கலாம். பண்ணை குட்டை களில் மழைநீரை தேக்கி விவசா யத்துக்கு பயன்படுத்தலாம். மானா வாரி சாகுபடியில் விதைகளை கடி னப்படுத்தி விதைப்பு செய்ய வேண் டும். பரிந்துரைக்கப்பட்ட விதை நேர்த்தி முறைகளை பின்பற்றினால் வடகிழக்கு பருவமழை மூலம் விவ சாயத்தை சிறப்பாக செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.