districts

img

நீலகிரியில் வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை

உதகை, நவ.11- நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை யால் உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பய ணிகள், பொதுமக்கள் அவதி அடைந் தனர். இலங்கைக்கு தென்கிழக்கில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து கொண்டு வருகிறது. இது வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து மன் னார் வளைகுடா செல்கிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு  சில மாவட்டங்களில் மிக பலத்த மழையும் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில் வெள்ளியன்று உதகை, குன்னூர், மஞ்சூர், கூடலூர் பகுதிகளில் கனமழை பெய்து வரு கிறது. இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தின் இயல்புநிலை பாதிக் கப்பட்டது. கனமழை காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் சாலை யில் காட்டேரி அடுத்த நந்தகோபால் பாலம் பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதுகுறித்த தகவலின் பெயரில் குன்னூர் தீய ணைப்பு துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று மரத்தை வெட்டி அகற் றினர்.

தேசிய நெடுஞ்சாலை என்ப தால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள்  நின்றதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதேபோல் வெள்ளியன்று பகல்  முழுவதும் மழை பெய்து கொண்டி ருந்ததால் உதகை தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் சுற் றுலா பயணிகள் கடும் அவதி அடைந் தனர். வழக்கத்தை விட குளிர் அதிக மாக இருந்ததால் குறைவான சுற் றுலா பயணிகள் மட்டுமே வந்திருந்த னர். மேலும், சுற்றுலா பயணிகள் கம் பளி ஆடைகளை அணிந்தபடியும், குடைகளை பிடித்த படியும் சுற்றுலா தலங்களுக்கு வந்து சென்றனர். கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டி கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை ஓட்டினர். இன்று ரெட் அலர்ட் இந்நிலையில், நீலகிரி மாவட்டத் தில் சனியன்று (இன்று) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் தலைமையில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய், தீயணைப்பு துறை உட்பட அனைத்து துறைகளும் ஒருங்கி ணைந்து செயல்படவும், பொதுமக் கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங் களை தயார் செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.  இதேபோல் உதகை  நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஆணையாளர் காந்திராஜன் உத்தர வின் பேரில், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் கால்வா யில் அடைப்புகளின் அகற்றும் பணி யில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர மாக ஈடுபட்டனர்.