districts

img

கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை, நவ.23- கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் கார ணமாக இயல்பு வாழ்க்கை பாதிப் புக்குள்ளாகியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அடுத்தடுத்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பல்வேறு இடங்களிலும் மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்துள் ளன. இதேபோல கோத்தகிரி மேட் டுப்பாளையம் சாலையில் குஞ்சப் பனை பகுதியில் சாலை குறித்து மரங்கள் இருந்ததால் சுமார் ஒரு  மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதி யில் போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.  கோவை  கோவை மாவட்டம்,  மேட்டுப் பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் புதனன்று இரவு துவங்கி வியாழனன்று காலை வரை  கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை  பெய்து வருகிறது. புதனன்று ஒரே  இரவில் 37 சென்டி மீட்டர் மழை  கொட்டி தீர்த்தது. மேட்டுப்பாளை யத்தில் உள்ள பில்லூர் அணைக் கான நீர் வரத்து மளமளவென அதி கரித்து வருகிறது. அணையின் நீர் மட்டம் 77 அடியில் இருந்து 89 அடி யாக ஒரே இரவில் உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளவான 100 அடியில் தற்போது அணையின் நீர் மட்டம் 89 அடியாக உள்ளது. அணையில் இருந்து மின் உற் பத்தி செய்ய 6000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கபட்டுள்ள தால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, கனமழை கார ணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. நொய் யல் ஆற்றின் முதல் தடுப்பணை யான சித்திரைச்சாவடி அணைக்கட் டில் தண்ணீர் நிரம்பி, பேரூர் நொய் யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடுகிறது. இதேபோன்று, கோவை மாநகரில் உள்ள செல்வ சிந்தாமணி குளம் தொடர்மழை கார ணமாக முழுவதுமாக நிரம்பியுள் ளது. தொடர்ந்து நொய்யல் ஆற் றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்ப தால் வெள்ளம் அதிகரித்து திருப் பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓடும் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம், மொடச்சூர் பகுதியில் பெய்த கனமழையால் நகராட்சிக் குட்பட்ட மேல்நிலைபள்ளி வாள கத்தில் மழை வெள்ளம் குளம்  போன்று தேங்கியது. பள்ளிக்கு  செல்லும் மாணவ மாணவிகள் தத் தளித்து தடுமாறி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி வாள கம் முழுவதும் மழை நீர் தேங்கி  காணப்படுவதால், கொசு உற்பத்தி யாகி மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் முன் நகராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.