சேலம், ஜூலை 31- என்ஜிஓ கூட்டுறவு பண்டகச்சாலை யில் தக்காளி கிடைக்காததால் பொது மக்கள் அலுவலர்களை முற்றுகை யிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவது தக்காளி வரத்து குறைவாக உள்ளதால் ஒரு கிலோ தக் காளி விலை 180 ரூபாய் 200 ரூபாய் வரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந் நிலையில், சேலம் மாவட்டத்தில் கூட்டு றவு பண்டகச் சாலையில் மலிவு விலை தக்காளி விற்பனை 20 கடைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப் பட்டது. ஒவ்வொரு கடைக்கும் 100 கிலோ தக்காளி விகிதம் விற்கப்பட்டு வந்தது ஒரு கிலோ தக்காளி ரூ.60 ரூபாய்க்கு மலிவு விலையில் விற்பனை செய்யப் பட்டு வந்தது. இந்நிலையில் சேலம் ஆட் சியர் அலுவலகம் அருகே உள்ள சுப்ப ராயன் தெருவில் அமைந்துள்ள என் ஜி ஓ கூட்டுறவு விற்பனையகத்தில் கடந்த மூன்று தினங்களாக தக்காளி விற்பனை நடைபெறவில்லை. திங்களன்று பல் வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வாங்க வந்த 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனைதொடர்ந்து அலுவலகத் திற்குள் சென்று தக்காளி வராதது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக் கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு தடை இன்றி தக்காளி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைய டுத்து அனைவரும் கலைந்து சென்ற னர்.