districts

img

எவ்வளவு முறை மோடி தமிழகம் வந்தாலும் எதுவும் நடக்காது - ஆ.ராசா எம்.பி.,

மே.பாளையம், மார்ச் 4- அரசியலுக்காக பிரதமர் எவ்வளவு முறை தமிழகம் வந்தாலும், இங்கு எதுவும் நடக்க போவதில்லை; பாவம் வந்துவிட்டு போகட்டும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசினார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் இந்து சமுதாய மக்கள் ஈமக்காரி யம் செய்யும் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள நந்தவனம் பகுதியை, நமக்கு நாமே  திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி நடை பெற்றது. மக்களின் பங்களிப்பாக 7.5 லட்சம்  ரூபாயும், மேட்டுப்பாளையம் நகராட்சி நிதி யாக ரூ.13.5 லட்சம் என மொத்தம் ரூ. 21 லட்சம்  செலவில் மேம்படுத்தபட்டது. இந்நிலை யில், பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அப்பகுதியை மக்கள் பயன்பாட் டிற்காக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா திங்களன்று திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்ளை சந்தித்து பேசிய ஆ. ராசாவிடம், அடிக்கடி பிரதமர் மோடி தமிழகம் வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த  அவர், ”அரசியலுக்காக மட்டுமே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பாவம் வந்துட்டு  போகட்டும். அவரால் இங்கு எதுவும் செய்ய  முடியாது” என்றார்.