கோவை, அக்.5- கோவையில் டெங்கு பாதிப்பு இல்லை, இருப்பினும் காய்ச்சல் முகாம்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார். கோவை மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பெண் குழந்தைகளை காப் போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்கிற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முதல்வரின் திட்டத்தின் படி, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சர்வதேச பெண் கள் தின துவக்க விழா நடை பெற்றது. இதில், ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்து பேசு கையில், பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று வாழ்வதற்கான வழிவகைகளை அனைவரும் செய்ய வேண்டும். அதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. பெண் களுக்கான உரிமைத் தொகை பெறாத பெண்களுக்கு இ-சேவை மையம் மூலம் மீண்டும் பெறுவ தற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. தகுந்த விவரங்களை அளிக்கும்பொழுது அதற்கான ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என் றார். தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசுகையில், தமிழகத்தில் கல்வியில் முன்னேறி இருந்தாலும் 50 சதவிகிதம் பெண்கள் மட்டுமே கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். அனைத்து பெண் குழந்தைகளும் கல்லூரிக்கு செல்வதற்கான திட்டம்தான் புதுமைப்பெண் திட்ட மாகும். இதன் மூலம் ஊக்கப் படுத்தும் விதமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. நமது கோவை மாவட்டத்தை பொருத்தமட்டில் வேலை வாய்ப்பு கள் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. கோவை யில் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகள் எதுவுமில்லை. ஆனா லும், காய்ச்சல் முகாம்கள் மற்றும் டெங்கு பரப்பக்கூடிய அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம். ஸ்கேன் சென்டர்கள் மூலம் குழந்தையை கண்டறிவதை தொடர்ந்து கண்காணித்து வரு கிறோம். பெண் குழந்தைகளுக் கான முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கிறோம் என தெரிவித்தார். முன்னதாக, பெண் குழந்தை கள் பிறப்பு விகிதத்தின் முக்கியத் துவம் குறித்தும், பெண் குழந்தை களுக்கான பாதுகாப்பு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் கள் ஆயிரம் பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியும் நடை பெற்றது. இந்த விழாவில் சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், முத்துமாணிக்கம், பாரப்பட்டி ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.