உதகை, மே 24- தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்தவித மாற்ற மும் இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை சார்பில், “புதியன விரும்பு – 2023” என்ற தலைப்பில் நடப்பு கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம், உதகை லவ் டேல் பகுதியில் உள்ள ஒன்றிய அர சின் லாரன்ஸ் பள்ளியில் செவ்வா யன்று நடைபெற்றது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறை அடித்து முகாமை தொடங்கி வைத்தார். இம் முகாமில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங் களை சேர்ந்த 1,140 மாணவ, மாணவி கள் பங்கேற்றனர். இங்கு மாணவர் களின் தனித்திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில் கலை, இலக்கியம், சமூக விழிப்புணர்வு உட் பட 15 வகையான பயிற்சிகள் அளிக் கப்பட உள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், இலக்கியவாதிகள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின் றனர். இதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியா ளர்களிடம் கூறுகையில், மாணாக்கர் கள் தங்களது வாழ்க்கையில் சிகரம் தொட வேண்டும் என்பதற்காக இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பள்ளிகளில் அடிப்படை வச திகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவிகள் படிக்கும் அரசு பள்ளிகளில் கழிப்பறை உள் ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படு கிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி, 1 முதல் 5 ஆம் வகுப்புகள் வரை வரு கிற ஜூன் 5 ஆந் தேதி முதல், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. 185 ஊராட்சிகளில் ஒவ்வொரு பள்ளியி லும் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த பணிகள் நடைபெற்று வரு கிறது. மேலும், நபார்டு நிதியின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி களில் உள்ள கட்டிடங்கள் விரைவில் நவீனமயமாக்கப்படும். 2 ஆண்டு களில் 11 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்து உள்ளனர். இந்த ஆண்டு 80 ஆயிரம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளி களில் சேர்ந்து படிக்க விண்ணப்பங் களை பெற்றுள்ளனர், என்றார். முன்னதாக, தோடர் பழங்குடி யின மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பள்ளி கல்வித்துறை முதன்மை செய லாளர் காகர்லா உஷா, நீலகிரி ஆட்சி யர் சா.ப.அம்ரித், முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, குன்னூர் வரு வாய் கோட்டாட்சியர் பூஷ்ணகுமார், கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேம மாலினி, லாரன்ஸ் பள்ளி முதல்வர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.