உதகை, மே 12- நீலகிரி மாவட்டம், கூடலூரில் 10 ஆவது வாசனை திரவிய கண்காட் சியை சுற்றுலாதுறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மலை மாவட்டமான நீலகிரி மாவட் டத்தில் ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கோடை விழாக் கள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு கடந்த வாரம் கோத்த கிரியில் கோடைவிழாவின் முதல் நிகழ்ச் சியாக 12 ஆவது காய்கறி கண்காட்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, வெள்ளியன்று கூடலூரில் 10 ஆவது வாசனை திரவிய கண்காட்சி துவங்கி யது. இந்த வாசனை திரவிய கண்காட் சியை சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியானது மூன்று நாட் கள் நடைபெறுகிறது. சுற்றுலா பயணி களை கவரும் வகையில் வாசனை திர விய பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டு உள்ளது. மேலும் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தின் கதாநாய கர்களான பழங்குடியின யானை பாகன் கள் பொம்மன், பெள்ளி தம்பதியினரை கௌரவப் படுத்தும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 95 கிலோ எடை கொண்ட அன்னாச்சி பூ, மாராட்டி மொக்கு, ஏலம், கிராம்பு, சோம்பு, கருஞ் சீரகம், ஜாதி பத்திரி, குருமிளகு உள் ளிட்ட பதிமூன்று வாசனை திரவிய பொருட்களை கொண்டு ரகு, பொம்மி யானைகள் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகளிடமி ருந்து பெறப்பட்ட 5000 பிளாஸ்டிக் பாட் டில்களை கொண்டு மீன் வடிவமும், பேரூராட்சிகளின் மூலம் வாகன டயர், வீணாகும் பொருட்களில் இருந்து கலைப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை போன்ற காட்சி அரங்குகள் வனத்துறை மூலம் பதப்படுத்தப்பட்ட கரடி, சிறுத்தை, குரங்கு, நீலகிரி வரையாடு ஆகிய விலங் குகளை கொண்ட காட்சி அரங்குகள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை காண வரும் சுற்றுலா பயணிகள் காட்சியரங்கு களை பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்நி கழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் பேசுகையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மூன்று மாநிலங் கள் ஒன்றிணைக்கும் பகுதியான கூட லூர் அருகே உள்ள தேவாலா பகுதியில் தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலாத் துறை ஒன்றிணைந்து பிரமாண்டமான படகு இல்லத்துடன் புதிய பூங்கா ஒன்று மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மூன்று மாநில சுற்றுலா பயணிகள் கூட லூர் பகுதிக்கு வருகை தருவார்கள், என்றார்.