districts

நீலகிரி: பேரூராட்சி தலைவர்கள் தேர்வு

உதகை, மார்ச் 5- நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 பேரூ ராட்சிகளில் 9 இடங்களில் திமுகவும், பிக் கட்டி பேரூராட்சியில் காங்கிரசும், கீழ் குந்தா வில் சுயேச்சை வேட்பாளரும் தலைவர் களாகத் தேர்வு செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் 11 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளுக்குத் தேர் தல் நடைபெற்று வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொ டர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில், தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் ஒருபகுதி யாக அதிகரட்டி பேரூராட்சி தலைவராக மு.பேபி, துணைத்தலைவராக ரா.செல்வன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். பிக்கட்டி பேரூராட்சி தலைவராக காங்கிரசை சேர்ந்த எம்.சந்திரலேகா போட் டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக காங்கிரஸ் வேட்பாளர் ஜெய குமரன் வெற்றி பெற்றார். உலிக்கல் பேரூ ராட்சியில் திமுகவைச் சேர்ந்த  அ.ராதா தலைவராகவும், பெ.ரமேஷ்குமார் துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஜெகதளா பேரூராட்சியில் திமுக தலைமை அதிகாரப்பூர்வ வேட்பாளராக பிர மிளா வெங்கடேஷ் என்பவரை அறிவித் தது. ஆனால், திமுகவைச் சேர்ந்த யசோதா மற்றும் கி.பங்கஜம் ஆகியோர் வேட்பு மனுக் களைத் தாக்கல் செய்தனர்.

இதில், பிரமிளா வெங்கடேஷ் 2 வாக்குகளும், யசோதா 5 வாக்குகளும் பெற்றனர். கி.பங்கஜம் 8 வாக்குகள் பெற்று, தலைவராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரசை சேர்ந்த ஜெயசங்கர் துணைத்தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கேத்தி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஹேமமாலினியை எதிர்த்து அதி முக வேட்பாளர் சந்திகா வேட்பு மனுத் தாக் கல் செய்தார். இதில், ஹேமாமாலினி 13 வாக்குகள் பெற்று தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், கேத்தி பேரூராட்சியில் அதிமுகவுக்கு 6 கவுன்சிலர் கள் இருந்த நிலையில், சந்திகா 5 வாக்கு கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந் தார். இதைத்தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள் துணைத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால், துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த விகடர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோத்தகிரி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஜெயகுமாரி தலைவராகவும், உமா நாத் போஜன் துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  நடுவட்டம் பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த கலியமூர்த்தியும், துணைத் தலை வராகத் துளசி ஹரிதாஸ் தேர்வு செய் யப்பட்டனர்.  ஓவேலி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த சித்ராதேவி தலைவராகவும், செல்வரத்தினம் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். கீழ்குந்தா பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பா ளர் சத்தியவாணி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இவர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா முன்னிலையில் திமுக வில் இணைந்தார். ஆனால், திமுக அதிகா ரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதன் பின் நடைபெற்ற வாக்குப்பதிவில், சத்திய வாணி 9 வாக்குகளும், நாகம்மாள் 6 வாக்கு களும் பெற்றனர். சத்தியவாணி தலைவராக வும், காங்கிரஸ் வேட்பாளர் நேரு துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டணி தர்மத்தை  மீறிய காங்கிரஸ்

தேவர் சோலை பேரூராட்சியில் பழங் குடியினர் சமூகத்தைச் சேர்ந்த திமுக வேட் பாளர் பா.வள்ளி தலைவராக வெற்றி பெற் றார். துணைத்தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, ஏ.வி. ஜோஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், கூட்டணி தர்மத்தை மீறி காங்கி ரஸ் வேட்பாளர் யூனஸ்பாபு, சிபிஎம் வேட் பாளரை எதிர்த்து, வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில், யூனஸ்பாபு 15 வாக்கு கள் பெற்று துணைத் தலைவராகத் தேர்வு  செய்யப்பட்டார்.