districts

img

நீலகிரி: 92 பேருக்கு கொரோனா தொற்று

உதகை, ஜன.11- நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒருநாள் கொரோனா தொற்றுக்கு 92 பேர் ஆளாகி யுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் செவ்வாயன்று ஒரே நாளில் புதிதாக 92 பேருக்கு கொரோனா பாதித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34  ஆயிரத்து 765 ஆக உயர்ந் துள்ளது. இதுவரை 34 ஆயி ரத்து 242 பேர் குணம டைந்து வீடு திரும்பியுள்ள னர். தற்போது 294 பேர்  மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வா கம் சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. பொதுமக்கள் அனை வரும் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகி றது.