உதகை, ஆக.3- நீலகிரி பூண்டின் விலை உயர்ந்துள்ளால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்க ரில் மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. நீலகிரியில் விளை விக்கும் பூண்டு அதிக காரத்தன்மை மற்றும் மருத்துவ குணம் இருப்பதால் சந்தையில் எப்போதும் நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில், இரண்டாவது போக விவசாயம் ஏப் ரல் மாதம் துவங்கியது. இம்முறை உதகை, கோத்தகிரி சுற்று வட்டாரத்தில் சராசரியாக, 2 ஆயிரத்து 500 ஏக்கரில் பூண்டு பயிரிடப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்ததால் பூண்டு பயிர்கள் நல்ல செழித்து வளர்ந்தன. தற்போது, அறு வடைக்கு தயாரான பூண்டுக்கு உதகை, மேட்டுப்பாளையம் சந்தைகளில் கிலோவுக்கு 500 முதல் 600 ரூபாய் வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து அறு வடை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உதகை அருகே உள்ள எம்.பாலாடா பகுதியில், ஜோதி என்பவர், 4 ஏக்கரில் பூண்டு பயிரிட்டுள்ளார். சந்தையில் நல்ல விலை கிடைத்து வருவதால் அறுவடைக்கு தயாரான பூண்டுகளை மூட்டைகளில் தயார் செய்து மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்ற னர். மேலும் இமாச்சலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் பூண்டு விதை வாங்க மேட்டுப் பாளையம் மண்டிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. இத னால், நீலகிரி பூண்டின் கொள்முதல் நாளுக்கு நாள் அதி கரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.