districts

img

நீலகிரி புத்தகத் திருவிழா நிறைவு ரூ.9 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை

உதகை, அக்.30- உதகையில் நடைபெற்று வந்த நீலகிரி புத்தகத் திருவிழா ஞாயிறுடன் நிறைவு பெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற இத்திரு விழாவில் ரூ.9 லட்சத்திற்கு புத்தகங்கள் விற் பனையாகின. நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடி யினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தகத் திருவிழா கடந்த அக்.20 ஆம் தேதியன்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள்  நடைபெற்ற இத்திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிறன்று உதகையில் நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை  வகித்தார். நகைச்சுவை இமயம் சண்முக வடிவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். தொடர்ந்து நீலகிரியைச் சேர்ந்த இலக் கிய சொற்பொழிவாளர்கள் மற்றும் பேச்சா ளர்கள் 16 பேருக்கு பயனாடை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆட்சியர் அருணா பேசு கையில், உதகை என்பது இயற்கை எழிலுக்கு மட்டும் உரியது அல்ல. படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், பண்பாளர்களுக்கும் உரித் தான பூமி. நாம் எத்தனை புத்தகங்கள் வாசிக் கிறோம் என்பதை பொருத்துதான் நம்மு டைய அறிவு விசாலப்படும். மேலும், வாசிப்பு பழக்கம் பொறுமையை போதிக்கும். கற் பனை ஆற்றலை பெருக்கும். படைப்பாற் றலை உருவாக்கும். மனி தனை மேன்மக்க ளாக்கும். எனவே அனுதினமும் வாசிப் போம். ஒரு நல்ல நூல், ஒரு நல்ல நண்பனுக்கு சமம். ஒரு சில நேரங்களில் நண்பர்கள் கூட பகைவராக மாறலாம். ஆனால், புத்தகம் ஒருபோதும் பகைமை கொள்ளாது. மனித னின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் என் கிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். இந்த புத்தகத் திருவிழா மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி ஆண்டு விழாபோல மகிழ்ச்சி, குதூகலத்தை அள்ளி தந்துள்ளது. இனிவரும் ஆண்டுகளி லும் நீலகிரி புத்தகத்திருவிழா பொதுமக்க ளின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெறும், என் றார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற் றன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டுகளித்தனர். 10 நாட்கள் நடைபெற்ற இப்புத்தகத் திரு விழாவில் ஒட்டு மொத்தமாக 13 ஆயிரத்து 200 பேர் பார்வையாளராக கலந்து கொண்ட னர். இவர்களில் 6,275 பேர் ரூ.9.06 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்ற தாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித் துள்ளனர். முன்னதாக, நிறைவுநாள் நிகழ்ச்சி யில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.