கோவை, செப்.16- கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங் களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கோவையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, உக்கடம் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதி காரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக புதிய தகவல்கள் கிடைத்தாக கூறி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரி கள் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புதிய வழக்கில் 10 பேர் சேர்க்கப்பட் டுள்ளனர். இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகம் மற்றும் தெலுங் கானா மாநிலங்களில் துவக்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, இரு மாநிலங் களிலும் மொத்தம் 30 இடங்களில் சோத னைகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவை அரபிக் கல்லூரியில் படித்த நபர் களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக கூறி என்ஐஏ அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கோவை மாநகராட்சி 82 ஆவது வார்டு கவுன்சிலர் முபசீரா இல்லத் தில் சோதனை நடைபெற்றது. முபசீரா வின் கணவர் ஆரிஃப், தியாகி குமரன் மார்க் கெட்டில் காய்கறி கடையில் பணிபுரிந்து வரு கிறார். இவரின் கடைக்கு பக்கத்தில் கடையை வைத்திருப்பவர் சனோஃபர் அலி என்பவரை தேசிய புலனாய்வு முகமையினர் விசாரித் தனர். இதுகுறித்து, ஆரிஃப் செய்தியாளரிடம் கூறுகையில், காய்கறி மார்க்கெட்டில் நான் பணிபுரியும் கடைக்கு அருகில் இருப்பவர் சனோஃபர் அலி. இவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரின் கடைக்கு அருகில் நான் வேலை பார்த்து வருவதன் காரணத்தினால், எனக் கும் அவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக் குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரணை நடத்தினர் என்றார்.