districts

img

பகுதி நேர நியாய விலை கடை திறப்பு

அவிநாசி, ஜன.5- நடுவச்சேரியை அடுத்து மாரப்பம்பாளையம் பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு  விழா ஞாயிறன்று நடைபெற்றது.  அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரிக்குட்பட்ட, மாரப்பம் பாளையம் பகுதியில் நியாய விலை கடை வேண்டும் என  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில்,  புதிதாக பகுதி நேர நியாய விலை கடை அமைக்கப்பட் டுள்ளது. இந்த நியாய விலை கடையை ஊராட்சி மன்றத் தலை வர் வரதராஜ் ஞாயிறன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சர வணன் நம்பி, ஒன்றியச் செயலாளர் சிவப்பிரகாஷ், ஊர் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.