கோவை, அக்.29- நாடாளுமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து நான்கு புதிய ரேசன் கடை கட்டடங்களை கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் ஞாயிறன்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளுக்கான புதிய கட்டடங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டித் தர வேண்டுமென தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார். அதற்கினங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமது நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் சௌரி பாளையம் ஹட்கோ காலனி 52 ஆவது வார்டிலும், அவிநாசி சாலை ஹோப் காலேஜ் அருகே சாஸ்திரி வீதியில் 24 ஆவது வார்டில் மற்றும் மசக்காளி பாளையம் 53 ஆவது வார்டு லட்சுமி புரம், விஸ்வநாதன் லே- அவுட், சக்திநகர் 54 ஆவது வார்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இதனை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு புதிய ரேசன் கடை கட்டி டங்களை திறந்து வைத்தார். இதில், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், 52 ஆவது வார்டு உறுப்பினரும், கிழக்கு மண்டலத் தலைவருமான இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். 24 ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.பூபதி, 53 ஆவது வார்டு உறுப்பினர் மோகன், 54 ஆவது வார்டு உறுப் பினர் எஸ்.பாக்கியம், மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.