districts

img

பொள்ளாச்சியில் முதல்வர் அறிவித்த புதிய திட்டங்கள்

கோவை, மார்ச். 14- பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில்,  கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி  ஆகிய நான்கு மாவட்டங்களுக் கான புதிய திட்டங்களை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி யில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்க ளுக்கான முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நான்கு மாவட்டங்கள் பயன்பெ ரும் வகையில் முதலமைச்ச புதிய  திட்டங்களை அறிவித்தார்.  இதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பு அதிகமாக இருக் கின்ற மரங்களை வெட்டி அகற்று வதற்காக 14 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். 3 இலட் சம் தென்னங்கன்றுகள், 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் நிதி  ஒதுக்கீட்டில் உழவர்களுக்கு இலவ சமாக வழங்கப்படும். அகில இந்திய அளவில் தேங்காய் விற் பனை செய்வதற்கான உரிய  சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப் படும். கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து  கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்களின் மூலம் நுகர் வோர்களுக்கு விற்பனை செய்யப் படும் உள்ளிட்ட 13 அறிவிப்புகள் கோவை மாவட்டத்திற்கு அறிவித் தார். இதேபோன்று, ஈரோடு மாவட் டத்திற்கு சோலார் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம், வ.உ.சி பூங்கா, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தித் தரப்படும். ஈரோடு மாநகராட்சிப் பகுதியில 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படும். புதிய  மாவட்ட மைய நூலகம் ஒன்று 6  கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் மஞ்சள் மற்றும் மஞ்சள் மதிப்பு கூட்டப் பட்ட பொருள்கள் இருப்பு வைத்து  வியாபாரம் செய்ய ஏதுவாக  குளிர்பதனக் கிடங்குகள் அமைக் கவும், கொடுமணல் அகழ்வாய் வில் கண்டெடுக்கப்பட்ட பொருட் கள் அடுத்த தலைமுறையினரும் அறிந்துகொள்ள காட்சிப்படுத்திட ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தொல்லியல் துறையின் மூலம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் உள்ளிட்ட 9  திட்டங்களும், திருப்பூர் மாவட்டத் தில், 11 கோடியே 50 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் பாலங்கள், திருப்பூர் மாநகராட்சிக்கு 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம், 8 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள், 13 சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட ஐந்து  அறிவிப்புகளும், நீலகிரி மாவட் டத்தில், உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத் தப்படும். இதற்காக பெரணி இல்லம் புதுப்பித்தல், புதிய  சுகாதார வளாகம் அமைத்தல், ஆர்க்கிட் மற்றும் போன்சாய் வளர்ப்புக்கூடம், வடிகால் கால் வாய் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் திட்டங்களை அறிவித்தார்.  முன்னதாக, இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, சு.முத்துசாமி, மு.பெ.சாமி நாதன், க.இராச்சந்திரன், மா.சுப்பி ரமணியன், கயல்விழி செல்வராஜ்  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராஜன், கு.சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டவர்களும் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.