தாராபுரம், ஜூலை 28- தாராபுரம் நகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.64.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தொடங்கி வைத்தார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ. 64.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்ப டுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய திட் டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா பாரதியார் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நகர மன்ற தலை வர் கு. பாப்புகண்ணன் தலை மையில் நடைபெற்றது. நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நக ராட்சி பொறியாளர் சண்முகம், நகராட்சி உதவி பொறியாளர் காளீஸ்வரி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், எஸ். எம்.யூசுப், சக்திவேல், முபாரக் அலி, நாகராஜன், புனிதா சக்திவேல், முத்து லட்சுமி, தேவி அபிராமி கார்த்திக், உசானா பானு, ஷேக் பரீத், கல்பனா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மாண வர்கள் கலந்து கொண்டனர்.