districts

img

புதிய சுகாதார நிலையங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர், ஏப்.8- திருப்பூர் மாவட்டத்தில்,  பொது சுகாதாரம்  மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறையின் சார் பில் சுகாதார நிலையங்களை மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்  தலைமையில் வெள்ளியன்று திருப்பூர்  மாவட்டம் காங்கேயம் வட்டம் சாவடிபாளை யத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்  தடுப்பு மருத்துத்துறையின் சார்பில் ரூ.48 லட் சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புறநோயாளிகள் பிரிவு, அவிநாசி  ஊராட்சி ஒன்றியம், நம்பியாம்பாளையம்  ஊராட்சி நம்பியாம்பாளையத்தில் ரூ.30   லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலை யம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம்,  தாயம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட் டில் துணை சுகாதார நிலையம் ஆகிய  புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். காங் கேயம் அரசு மருத்துவமனையை மாவட்ட  தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த  ரூ.12 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டி டம் கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர்  (சுகாதாரப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்கு மார், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம்  ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஷ்கு மார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்  கிருஷ்ணவேணி வரதராஜ், சாவடிப்பாளை யம் ஊராட்சி மன்றத்தலைவர் துரைசாமி, வட்டார மருத்துவ அலுவலர் கே.முரளி, மற் றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து  கொண்டார்கள்.