districts

img

கோவை சரக புதிய டிஐஜி பொறுப்பேற்பு

கோவை சரக புதிய டிஐஜி பொறுப்பேற்பு கோவை, ஆக.11- கோவை சரக காவல் துறை துணைத்தலைவராக, திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த சரவண சுந்தர் பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை சரக காவல் துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த ஜூலை 7 ஆம் தேதியன்று பந்தையசாலையிலுள்ள முகாம்  அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காலியாக உள்ள அவரது இடத்திற்கு திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த சரவண சுந்தர் நியமிக்கப்பட்டார். அவர் வெள்ளியன்று பந்தைய சாலையிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண் டார். சரவண சுந்தருக்கு காவல் அதிகாரிகள், ஆய்வாளர் கள் வாழ்த்து தெரிவித்தனர்.