districts

img

திருப்பூரில் 19 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் தொடக்கம்

திருப்பூர், ஜூலை 20 – திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டப் பேருந்துகள், நகர்ப்புற  பேருந்துகள் என மொத்தம் 19 வழித்த டங்களில் புதிய பேருந்துகளை அமைச் சர்கள் சனியன்று துவக்கி வைத்தனர். திருப்பூர் புதிய பேருந்து நிலைய த்தில் திருப்பூரில் இருந்து ராமேஸ்வ ரம், செங்கோட்டை, பரமக்குடி, மன்னார் குடி, நாகர்கோவில்,  காரைக்குடி, கட லூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக் கும், திருப்பூர் மாவட்டத்திற்குள் கணி யூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக் கும் நகர்ப்புற பேருந்துகள் என 19 புதிய  பேருந்துகள் துவக்க விழா சனியன்று  நடைபெற்றது. இதில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் புதிய பேருந்துகளை தொடக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ், தெற்கு சட்டமன்ற  உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் ந. தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையா ளர் பவன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமி நாதன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத் திற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 48  வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் திருப்பூரில் இருந்து  செங்கோட்டை, பரமக்குடி, மன்னார் குடி, நாகர்கோவில், காரைக்குடி, கட லூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும்,  தாராபுரத்திலிருந்து சென்னைக்கும்,  திருப்பூர் மாவட்டத்திற்குள் கடத்தூர் மற்றும் கணியூர் உள்ளிட்ட வழித்தடங்க ளில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக கோவை லிமி டெட் மேலாண் இயக்குனர் ஜோசப்  டயாஸ், பொது மேலாளர் செல்வகு மார், துணை மேலாளர்கள் ராஜேந்தி ரன், ஜோதி, மணிகண்டன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.