நாமக்கல், நவ.10- முதலைப்பட்டியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிறன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு, பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி, முதலைபட்டியில் ரூ19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு பேருந்து நிலையம், கடந்த அக்.22 ஆம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புதிய பேருந்து நிலையத்தில் 51 பேருந்து நிறுத்தங்கள், 57 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணிகள் காத் திருப்புப் பகுதி, தலா ஒரு தாய்மார்கள் பாலுட் டும் அறை, ஓட்டுநர்கள் ஓய்வு அறை, நேரக் காப்பாளர் அறை, பொருள் வைப்பு அறை, தூய்மைப் பிரிவு அலுவலகம், மின்வாரிய அறை, காவலர் அறை, பொது சேவை பிரிவு 200 எண்ணிக்கை இருசக்கர வாகனங்கள், 60 எண்ணிக்கை நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகனம் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி உள் ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு எவ் வித சிரமமின்றி அனைத்து புறநகர் பேருந் துகளும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு பேருந்து நிலையத்திற்கு வந்து செல் லும் வகையிலும், புதிய பேருந்து நிலை யத்திலிருந்து பழைய பேருந்து நிலையத் திற்கு உரிய கால இடைவெளியில் பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலை யில், ஞாயிறன்று அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து பேருந்துகளும் பொதுமக்க ளுக்கு எவ்வித சிரமமின்றி இயக்கப்பட்டு வரு கின்றன. இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஞாயிறன்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, நகர்மன்ற உறுப்பி னர்கள் ஆர்.சிவக்குமார், பி.சங்கீதா, மாநக ராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஏ.கே.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.