districts

img

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் புதிய பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறப்பு

பொள்ளாச்சி, ஏப்.7- பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வியாழனன்று திறந்து வைத்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - பாலக் காடு சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டி, அப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கடந்த 2018 ஆம்  ஆண்டில் புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு, அனுமதி வழங் கப்பட்டது. இதன்படி ரூ.47 கோடியே 10 லட் சம் மதிப்பீட்டில் 810 மீட்டர் நீளத்தில், 17 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டும் பணி நடை பெற்று வந்தது. இதற்கிடையே கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கட்டு மான பணியில் தொய்வு ஏற்பட்டது. இத னால், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பின்னர் மீண் டும் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங் கப்பட்டு, தற்போது ரூ.52 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து மேம்பாலம் திறப்பு விழா வியாழனன்று சென்னையில் காணொளி காட்சி வாயிலாக  நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் புதிய பாலத்தை திறந்து வைத் தார். பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலம்  திறப்பு நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன், பொள்ளாச்சி   நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ் ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறி யாளர் ஜெயலட்சுமி, உதவி கோட்ட பொறி யாளர் மல்லிகா, பொறியாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப் போது, புதிய பாலம் வழியாக சென்ற வாகன  ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.