வாலிபர் சங்க புதிய கிளை அமைப்பு
பொள்ளாச்சி, மே.18- பொள்ளாச்சியை அடுத்த நல்லூத்துக்குளி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற் றது. இதில் கோவை மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனக ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன், சிபிஎம் தாலுகா குழு உறுப் பினர் கே.மகாலிங்கம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து கிளை யின் தலைவராக ரா.பட்டீஸ் வரன், துணை தலைவராக வெ.மணிக்குமார், ெசயலா ளராக எஸ்.அழகர், பொருளா ளராக ப.ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
அவிநாசி அரசு கல்லூரியில் பாரதி நூலகம் திறப்பு: பாரதியார் குடும்பத்தினர் பங்கேற்பு
அவிநாசி, மே 18- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதி நூலகம் திறப்பு விழாவில் பாரதியார் குடும்பத்தினர் பங்கேற்றனர். பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா வையொட்டி, செவ்வாயன்று அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் பாரதி நூலகம் திறப்பு விழா, பாரதி செல்லம்மாள் திருவுருவ சிலை திறப்பு, பாரதி கலையிலக்கியப் போட்டி களில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு, பாரதி குறும்பட முன்னோட்டம் வெளியீடு ஆகி யவை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, கல் லூரி முதல்வர் ஜோ.நளதம் தலைமை வகித் தார். தமிழ்த்துறைத் தலைவர் போ.மணி வண்ணன் முன்னிலை வகித்தார். சேவா லயா நிறுவனர் வி.முரளிதரன் வாழ்த்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து பாரதி யின் கொள்ளுப் பெயரன் இராஜ்குமார் பாரதி பேசுகையில், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் என்ற பாடலுக்கு ஏற்ப ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம் தரக்கூடியது. கல்வி இல்லாத ஊரை தீயிட்டு எரிக்க வேண்டும் எனக் கூறியவர் பாரதி. ஆகவே, மாணவர்கள் நல்ல முறை யில் கல்வி கற்றும், கற்பித்தும் முன்னேற வாழ்த்துக்கள் என்றார். பாரதியின் எள்ளுப் பெயரன் நிரஞ்சன் பாரதி பேசுகையில், பாரதியின் முதல் புது மைப் பெண் அவரது துணைவியார் செல்லம் மாள். தியாகம், தொண்டு, புரட்சி இவை அனைத்திற்கும் முன்னோடியான சாத னைப் பெண் அவர். செல்லம்மாள், பாரதி யின் அனைத்து பாடல்களை நினைவில் வைத்து பாடக்கூடியவர். செல்லம்மாள் இல் லாவிட்டால், பாரதி மகாகவி பாரதியாக உரு வாகியிருக்க முடியாது என்றார். மேலும், கல்லூரி மாணவிகள் பாரதியின் நூல்களை படித்து, புரட்சியாளர்களாக உருவாக வேண்டும். மாணவர்கள் நூலகங்களை வழித்துணையாக கொள்ள வேண்டும் என் றார். முன்னதாக, இதில் தமிழ் விரிவுரையா ளர்கள் தே.புனிதராணி, ம.நந்தினி, மாணவர் கள் சீ.சஞ்சய்குமார், அ.மனோஜ் ஆகி யோர் ஒருங்கிணைத்தனர்.
குரூப்-2 தேர்வு மையங்களை அதிகரிக்க கோரிக்கை
திருப்பூர், மே 18- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் அறிவித்துள்ள குரூப்-2 தேர்வுக் கான மையங்களை திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல்படுத்தி அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள் ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலா ளர் செ.முத்துகண்ணன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு செவ்வாயன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-2 தேர்வு மையங் கள் திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக அறிவிக்கப்படும். ஆனால் தற்போது திருப்பூர், திருப்பூர் தெற்கு, தாராபுரம், அவிநாசி ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பகுதி தேர்வு எழுத செல்வோருக்கு தேவையற்ற நேர விரயத்தையும், மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தும். எனவே இம்மாவட்டத்தில் கூடுதலாக உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், பல் லடம் ஆகிய பகுதிகளில் தேர்வு மையங் களை அறிவித்து, குரூப்-2 தேர்வு எழுது வோர் நிம்மதியுடனும், அமைதியாகவும் தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாக செ.முத்துகண்ணன் கூறியுள்ளார்.
காவலர் தூக்கிட்டு தற்கொலை
கோவை, மே 18- மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப் பாளரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர் பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். தூத்துக்குடி மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவ ரது மகன் தாமோதரன் (41). தற்போது மேட்டுப்பாளை யத்தை அடுத்துள்ள சிறு முகை ஆலாங்கொம்பு பகுதியில் குடியிருந்து வரு கிறார். இவருக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திரு மணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் தற்போது மேட்டுப்பாளை யம் துணை காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரு கிறார். இந்நிலையில், வழக்கம் போல் பணி முடித்து வீட் டிற்கு சென்ற அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த சிறுமுகை போலீசார் அங்கு சென்று சட லத்தை மீட்டு மேட்டுப் பாளையம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்த னர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.