districts

img

நேரு உள் விளையாட்டு அரங்கம் புதுப்பிப்பு

கோவை, ஏப்.28- கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் ரூ.7 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் வியாழனன்று துவங்கிவுள்ளது.  கோவையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம் பல மாதங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில், அதனை புதுப்பிக்குமாறு விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரு உள்விளையாட்டு அரங்கத்தை புதுப்பிக்கும் பணிக்கு ரூ.7 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிந்திருந்தார்.  அதன்படி, ஓடுதள பாதையை பெயர்த்து எடுக்கப்பட்டு சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்படுகிறது. மேலும் இங்கு மழை நீர் வடிகாலையும் புதுபிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதுபிக்கும் பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்குமாறு விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.