சேலம், ஜூன் 25- குரும்பப்பட்டி உயிரியல் பூங் காவில் வனவிலங்கு பாதுகாவ லரை முட்டிக்கொன்ற கடமானை தனிக்கூண்டில் அடைக்க சேலம் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு மலையடிவாரத்திலுள்ள குரும்பப் பட்டி வன உயிரியல் பூங்காவில் புள்ளிமான், கடமான், முதலை, குரங்கு, முயல், பறவைகள் என 200க்கும் மேற்பட்ட வன உயிரினங் களை வனத்துறையினர் பராம ரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே 30 ஆம் தேதியன்று பூங்கா வில் கடமான்கள் அடைக்கப்பட் டுள்ள உறைவிடத்திற்குள் தற்கா லிக ஊழியர்களான தமிழ்ச்செல் வன், முருகேசன் ஆகியோர் உணவ ளிக்க சென்றனர். அப்போது ஒரு ஆண் கடமான் ஆக்ரோஷமாக வந்து தமிழ்ச்செல்வனை முட்டியது. இதனை தடுக்க வந்த முருகேசனை யும் முட்டி தள்ளியது. இதில் தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரி ழந்தார். இச்சம்பவத்தையடுத்து கட மான்களை வனத்துறையின் மருத் துவக்குழுவினர் தீவிரமாக கண்கா ணித்து வந்தனர். அதில் பெரிய அள வில் கொம்புகளைக் கொண்ட இரண்டு கடமான்கள் மிகவும் ஆக் ரோஷமாக இருப்பது தெரியவந் தது. இதனால் அந்த இரண்டு மான் களையும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவிக்க முடிவு செய்து, மாவட்ட வனத்துறை சார்பில் சென் னையிலுள்ள தலைமை வனப்பாது காவலருக்கு கடிதம் அனுப்பி வைக் கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த உத்தர வும் வராததால் தற்காலிகமாக மாற்று ஏற்பாடு செய்ய வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது 37 கடமான்கள் அடைக் கப்பட்டுள்ள பெரிய அளவிலான உறைவிடத்தின் ஒரு பகுதியை தேர்வு செய்து அங்கு கம்பி வேலி யுடன்கூடிய தனிக்கூண்டு ஏற்ப டுத்த முடிவு செய்து, அந்த தனிக் கூண்டில் 2 கடமான்களையும் அடைக்க அனுமதி வழங்க கேட்டு, பூங்காவின் உதவி வனப்பாதுகா வலர் செல்வகுமார், வனச்சரகர் கமலநாதன் ஆகியோர் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவரும் இதுவரை எந்த உத்தர வும் வழங்காத நிலையில் வனத் துறை ஊழியர்கள் கட மான்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற் பட்டுள்ளது.