கோபிசெட்டிபாளையம், அக்.24- சத்தியமங்கலத்தில் திமுக சார்பில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வடக்கு மாவட்ட இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து பெறும் இயக்கம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு, “நீட் தேர்வு பாதிப்பு, நீட்தேர்வு விலக்கு” குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையத் நசீர், கார்த்திகேயன், வைத்தீஸ்வரன், சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் ஜானகி ராமசாமி, நம்பியூர் பேரூராட்சி தலை வர் செந்தில்குமார், பெரிய கொடிவேரி பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்மகன் சிவா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.