districts

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

தருமபுரி, ஜூன் 25- மொரப்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி ஊராட்சிக்குட்பட்டது சடையம்பட்டி கிராமம். இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினரின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து, இதன்முலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆழ்துளை கிணறு  பழுதடைந்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. தினந்தினம் குடி நீருக்காக விவசாயக் கிணற்றை தேடிச்செல்லும் நிலை  ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஊராட்சி மூலம் வீட்டு உபயோகத்திற்கும், குடிப்பதற்கு ஒகேனக்கல் குடிநீரும் வழங்க வேண்டும் என வலியு றுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று காலிக்குடங்களுடன், அரூர் - தருமபுரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்த மொரப்பூர் காவல் ஆய்வாளர் வான்மதி, கம்பை நல்லூர் காவல் ஆய்வாளர் காளியப்பன், ஊராட்சி மன் றத் தலைவர் கலைமணி மாயக்கண்ணன் ஆகியோர் சம் பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது இரண்டு தினங் களுக்குள் ஆழ்துளை கிணற்றை சரிசெய்து, குடிநீர்  வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென் றனர். முன்னதாக, இந்த மறியலில் விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் ராமன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.