3 பேர் படுகாயம் பொள்ளாச்சி, மார்ச் 14- ஆழியார் அருகே சாலையில் சென்ற காரை, ஒற்றை காட்டு யானை தாக்கி சேதப்படுத்திய நிலையில், காரி லிருந்த மூவர் காயங்களுடன் உயிர் தப்பினர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட நவமலை மின் வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (49). இவர் அதே பகுதியில் அவசர ஊர்தி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலை யில், சரவணனும் அவரது உறவினர் கள் இரண்டு பேரும் பொள்ளாச்சியில் இருந்து நவமலையில் உள்ள சரவ ணன் குடியிருப்பிற்கு ஞாயிறன்று மாலையில் காரில் சென்று கொண்டி ருந்தனர். அப்போது கவியருவி அருகே சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை இவர்கள் சென்ற பாதையின் குறுக்கே வந்து வாகனத்தை வழி மறித்துள்ளது. இதனால், செய்வதறி யாது திகைத்து வாகனத்தை பின் னோக்கி இயக்கியபோது, வாக னத்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை காரை சேதப்படுத்தி பள்ளத்தில் தள்ளி யது. அப்போது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத் துறை ஊழியர்கள் யானையை கூச்ச லிட்டு கட்டுக்குள் விரட்டினர். இதன் பின்னர் காரில் சிக்கியிருந்த சரவ ணள் உள்ளிட்டோரை மீட்டு சிகிச்சைக் காக ஆழியாரில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையில், இந்த ஒற்றை காட்டு யானை கடந்த 10 நாட்களாக அதேபகுதியில் உலா வந்து கொண்டி ருக்கிறது. எனவே, நவமலை கிராம மக்களுக்கும், மின்வாரிய ஊழியர் களும் கவனமாக இருக்க வேண் டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.