கோவை, ஜூலை 28- மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாத்திட, மத நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை தமி ழக அரசு மீட்க வேண்டும் என வலி யுறுத்தி இயற்கை வளங்கள் பாது காப்பு கூட்டியக்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பழங்குடி மக்களின் விளை நிலங்களில் சட்டவிதிகளை நடை முறைப்படுத்திட வேண்டும். சட்ட விரோதமான முறையால் ஈஷாவுக் குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள், இளைஞர்களை மீட்டு மனோதத்துவ மருத்துவ ஆலோ சனை வழங்கி பெற்றோருடன் ஒப் படைத்திட வேண்டும். கோவை மக் களின் குடிநீர் ஆதாரமாக விளங் கும் சிறுவாணியில் இருந்து பல கோடி லிட்டரை கொள்ளையடிக் கும் ஈசா, காருண்யா போன்ற மத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் மற் றும் கோவையில் உள்ள குளங் களை சுற்றி ஆக்கிரமித்துள்ள நிலங் களை கைப்பற்றி நீர் நிலைகளை காத்திட வேண்டும்.
வனவிலங்குக ளின் வழித்தடங்கள் ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும். மேலும் அங்கு உள்ள கட்டுமானங்களை இடித்து விலங்குகளின் வளங் களை காத்திட வேண்டும். அரசியல் சாமியாராக செயல்படும் ஜக்கி (எ) ஜெகதீஸ் ஆண்டுக்கு ஒரு முறை யோகா என்ற பெயரில் லட்சக்கணக் கான மக்களை திரட்டி ஒலி-ஒளி களை சட்டத்திற்கு புறம்பாக அமைத்து உயிர்வாழ் இனங்களை அழித்தொழிக்கிறார். இதனை தடுத்து உயிரினங்கள் மற்றும் வனத்தை வளத்தை பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவானந்த காலனி பவர்ஹவுஸ் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திவிக மாநகர தலைவர் நேரு தாஸ் தலைமை தாங்கினார். பறை இசையுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், தபெதிக மாநில அமைப்பு செயலா ளர் ஆறுச்சாமி, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக் குமார், திராவிடத்தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் பங் கேற்று இயற்கை வளங்களை பாதுகாப்போம், மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்போம், ஈசா, காருண்யா, மாதஅமிர்ந்தனாயி உள்ளிட்ட மத நிறுவனங்கள் ஆக் கிரமித்துள்ள நிலங்களை மீட்போம் என்கிற முழக்கங்களை எழுப்பி னர்.