தருமபுரி, மார்ச் 20- பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது. தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். மின்சார சட்டதிருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். நூறுநாள் வேலைத்திட்ட நிதி ஒதுக் கீட்டை அதிகப்படுத்தி, நகர்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள் ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட் டமைப்பினர் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் எல்பிஎப் மாவட்ட தலைவர் அன்புமணி, சிஐடியு நிர்வாகி சீனிவாசன், ஏஐசிசிடியு மாநில செயலாளர் கெ.கோவிந் தராஜ், மாவட்ட செயலாளர் சி.முருகன், எல்பிஎப் நிர்வாகி கள் தங்கராஜ், முருகன், ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.