districts

img

உடுமலை அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினவிழா

உடுமலை, பிப்.28- உடுமலைப்பேட்டை சிவசக்தி காலனியில் உள்ள அரசு  உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா செவ்வா யன்று நடைபெற்றது.  பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தேசிய  அறிவியல் தினம் பற்றியும், பாரத ரத்னா விருது பெற்ற சர்.சி. வி.ராமன் பற்றியும் தலைமையாசிரியர் விரிவாக எடுத்து கூறி னார். அறிவியல் ஆசிரியை சுமதி, ராமன் விளைவு பற்றி விளக் கிக் கூறினார். உடுமலைப்பேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை தலைவர் செல்லத்துரை இந்த விழாவில் கலந்து  கொண்டு அறிவியலின் முக்கியத்துவம் பற்றியும், அறிவியல்  மனப்பான்மையை மாணவர்களிடம் வளர வேண்டும் என்பது  குறித்தும் விரிவாக பேசினார். மேலும் இந்த ஆண்டின் கருப் பொருளான உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல் குறித்த கருத்துக்களை எடுத்துக் கூறினார். ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் தேசிய அறிவியல் தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.