நாமக்கல், மார்ச் 3- திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல் லூரி அரங்கத்தில் தேசிய அறிவியல் மற் றும் கணித நாள் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட் பக் கல்லூரியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சில், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், சென்னை மற் றும் இந்து தமிழ் திசை நாளிதழ் நிதி உதவியுடன்,“தேசிய அறிவியல் மற் றும் கணித நாள் 2024” விழா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இதில், கேஎஸ்ஆர் கல்வி நிறுவங்க ளின் தலைவர் சீனிவாசன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அகிலா முத்துராமலிங்கம், கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் வழி கட்டுதலின்படி இவ்விழா நடைபெற் றது. சேலம், இந்திய தாவரவியல் ஆய்வு தெற்கு மண்டல விஞ்ஞானி, களி யமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பது குறித்து எடுத் துரைத்தார். பின்னர், ஈரோடு மாவட்டம், திரு வாச்சி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை தனபாக்கியம் பேசுகையில், அறிவியல் நமக்கு தினம் தோறும் என்னவெல்லாம் உதவி செய் கிறது என்பதை விரிவாக பள்ளி மாண வர்களிடையே எடுத்துரைத்தார். மேலும், தேசிய அறிவியல் மற்றும் கணித தின ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, அறிவியல் மற்றும் கணித தினத் தின் முக்கியத்தும் மற்றும் சிறப்பினை கூறினார். இறுதியில்இயற்பியல் துறைத் தலைவர் வாசுதேவன் நன்றி யுரை கூறினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர் இடையே அறி வியல் மற்றும் கணிதத் திறனை வளர்ப்பதற்கான போட்டிகள் நடை பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.